Thursday, December 19, 2013

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளியான இராணுவ கொப்ராலுக்கு 81 வருட கால கடூழிய சிறை!

19th of December 2013
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியான இராணுவ கொப்ராலுக்கு 81 வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணதிபதி இன்று இத்தீர்ப்பை அறிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ கொப்ரால் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

7500 ரூபா அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 வருடகால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என நீதிபதி அறிவித்துள்ளார். 
 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...