Saturday, December 14, 2013

யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்!

14th of December 2013
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்  தொடர்கின்றது.

யாழ். வைத்திய சாலையில் தொண்டர்களாக பணிபுரிவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி நேற்றைய தினம் முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தினால் வைத்தியசாலை சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோயாளர் பராமரிப்பு மற்றும் நோயாளர்களை கொண்டு செல்லல் என்பது இவர்களின் போராட்டத்தினால் பாதிப்படைந்துள்ளது.

விடுதிகளில் பணிபுரியும் தாதியர்களும், சுகாதார சிற்றூழியர்களுமே நோயாளர்களை பரிசோதனைகளுக்காக கொண்டு செல்கின்றனர்.

அதற்கும் போதிய ஆள் வசதி இல்லாத காரணத்தால் நோயாளர்கள் சேவையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

எமக்கு தீர்வு கிடைக்குவரை நாம் எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...