Friday, December 13, 2013

தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க முடியாது: கோதபாய ராஜபக்ச!

14th of December 2013
தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றினால் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 500க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது.
 
ஏற்கனவே ஆணைக்குழுவின் 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடியவாறான பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...