Saturday, December 14, 2013

கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் 10300 முறைப்பாடுகள்!

14th of December 2013
காணாமல் போதல்கள் தொடர்பில் 10300 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
பொதுமக்களினால் 6000 முறைப்பாடுகுள் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புத் தரப்பின் பெற்றோர் மற்றும் உறவினர்களினால் 4307 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
1990ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் எந்தவொரு பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் நவம்பர் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், பதவிக்காலத்தை டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...