Tuesday, December 17, 2013

அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி செய்தவர் கைது!

17th of December 2013
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தாய்லாந்தில் வேலை பெற்றுத்தருவதாக கூறி சுமார் 15 இலட்சம் ரூபா மோசடி செய்த நபரொருவர் கொட்டாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 


பொலிஸ் விஷேட குழுவொன்றினாலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கெதிராக பல நீதிமன்றங்களால் சுமார் 24 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்; வைக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...