Sunday, December 15, 2013

ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் தோற்கடிக்க வழி: திஸ்ஸ விதா­ரண!

16th of December 2013
ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் எதிர்­வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்­பாக முன் ­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­படும் செய ற்­பா­ டு­களை தோற்­க­டிக்­க­வேண்­டு­மானால் அர­சாங்கம் கற்­ற­றிந்த பாடங்­க ளும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் முக்­கி­ய­மா­ன­வற்றை 
 
அமுல்­ப­டுத்­தி­யா­க­வேண்டும் என்று அமைச்­சரும் முன்னாள் சர்­வ­கட்சி பிர­தி­நி­திகள் குழுவின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.
 மேலும் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான இணக்­கப்­பாட்டை உரு­வாக்­கிக்­கொள்ள நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் வகையில் அமை­ய­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
இந்த விட­யங்கள் குறித்து அமைச்சர் பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண மேலும் குறிப்­பி­டு­கையில்,
யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் முன்­னேற்­றங்­களை வெளிப்­ப­டுத்­த­வேண் டும் என்று சர்­வ­தேசம் கூறி­வ­ரு­கின்­றது. அந்­த­வ­கையில் எதிர்­வரும் மார்ச் மாதம் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் ஏதா­வது சிக்­கல்கள் ஏற்­ப­டுமா என்று கேள்வி எழுந்­துள்­ளது.
இந்­நி­லையில் இலங்­கையின் விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச சமூகம் தலை­யி­டு­வதை நாங்கள் முழு­மை­யாக எதிர்ப்­ப­துடன் அவ்­வாறு தலை­யி­டக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­து­கின்றோம். எமது பிரச்­சி­னையை எம்மால் தீர்த்துக்­கொள்ள முடியும் என்றும் சர்­வ­தே­சத்துக்குக் கூறு­கின்றோம்.
 
ஆனால் மார்ச் மாதம் இலங்கை தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­படும் செயற்­பா­டு­களை தோற்­க­டிக்­க­வேண்­டு­மானால் நாங்கள் செய்­ய­வேண்­டிய சில முக்­கிய விட­யங்கள் உள்­ளன. அவற்றை கட்­டாயம் செய்­தா­க­வேண்டும்.
 
குறிப்­பாக கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அர­சாங்கம் விரை­வாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
 
நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் அனைத்­தையும் விரை­வாக அமுல்­ப­டுத்த முடி­யா­வி­டினும் முக்­கி­ய­மா­ன­வற்றை விரை­வாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது மிகவும் அவ­சி­ய­மாகும். அதன் மூலமே ஜெனி­வாவில் நாங்கள் எதிர்­கொள்­ளப்­போகும் நிலை­மை­களை சமா­ளிக்க முடியும்.
 
இதே­வேளை தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்த நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் உரிய முறையில் இடம்­பெ­ற­வேண்டும்.
 
குறிப்­பாக இந்த பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை எப்­ப­டி­யா­வது இணைத்­துக்­கொள்ள முயற்­ சிக்­க­வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு நம்­பிக்கை ஏற்­படும் விதத்தில் பாரா­ளு­மன்றத் தெரிவுக்குழுவின் செயற் பாடுகள் அமையவேண்டியது அவசியமா கும்.
 
எனவே கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வதும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வர­வ­ழைப்­ப­துமே ஜெனி­வாவில் ஏற்­ப­டப்­போகும் நிலை­மை­களை வெற்­றி ­கொள்­வ­தற்­கான வழியா கும் என்றார்,
 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...