Monday, December 30, 2013

தீ விபத்தில் கொட்டாஞ்சேனை ஆடைத் தொழிற்சாலைக்கு பாரிய சேதம்!

31st of December 2013
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
கொழும்பு, கொட்டாஞ்சேனை – பரமானந்த விகாரை மாவத்தையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
கொட்டாஞ்சேனை பொலிஸார் மற்றும் கொழும்பு தீயணைப்புப் படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
 
தீயினால் ஏற்பட்ட நட்டம் இன்னும் கணிப்பிடப்படவில்லை.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...