Monday, December 16, 2013

வெளிநாடுகளில் பணிபுரிந்த இலங்கையர்களில் 349 பேர் கடந்த ஒன்பது மாதங்களில் மரணம்!

17th of December 2013
வெளி­நா­டு­க­ளுக்குச் சென்­றி­ருந்த  இலங்­கையர் 349 பேர் இந்த வரு­டத் தின் ஒன்­பது மாதங்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர் என வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.
 
இவ்­வாறு மர­ண­ம­டைந்­த­வர்­களின் சட­லங்­களை வெளி­நாட்­டு­வேலை வாய்ப்பு பணி­யகம் மற்றும் கவுன்­சிலர் அலு­வ­லகம் ஆகி­யன இணைந்து  நாட்­டுக்கு கொண்டு வந்தன. அதி­க­மான சட­லங்கள் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்தே கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்­ளன.
 
அங்கு 110 இலங்­கை­யர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். கட்­டாரில் 47 பேரும் குவைத்; இல் 36 பேரும் இத்­தா­லியில் 35 பேரும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் 26 பேரும் இந்­தி­யாவில் 3 பேரும் ஏனைய நாடு­களில் 92 பேரி­னதும் சட­லங்கள் நாட்­டுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.

180 மர­ணங்கள் நோயி­னாலும், 75 மர­ணங்கள் விபத்­து­க­ளாலும், 19 தற்­கொலை­களும், 70 மர­ணங்கள் காரணம் நிரூ­பிக்­கப்­ப­டாத வகை­யிலும் இடம்பெற்றுள்ளன.  கடந்த வருடம் வெளிநாட்டில் சுமார் 431 பேர் இறந்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...