Sunday, December 15, 2013

மனித உரி­மைகள் தினத்­தன்று தாக்குதல்: ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!

ஐக்­கிய நாடுகள் சபை­யினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட சர்­வ­தேச மனித உரி­மைகள் தினத்­தன்று மனித உரி­மைகள் குறித்த கவ­ன­யீர்ப்புப் போராட்­ட­மொன்றை அமை­தி­யான முறையில் நடத்­தி­யி­ருந்தோர்  மீது இனந்­தெ­ரி­யா­தோரால் மேற்­கொள்­ளப்­பட்ட கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தலைக் கண்­டித்து திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு அவ­சர கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார்.
 
அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
அதி­மே­தகு ஜனா­தி­பதி ராஜ­பக்ஷ அவர்­கட்கு,
ஐக்­கிய நாடுகள் சபை­யினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட சர்­வ­தேச மனித உரி­மைகள் தின­மா­கிய கடந்த டிசம்பர் 10ஆம் திக­தி­யன்று திரு­கோ­ண­ம­லையில் பிர­தான பேருந்து நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் அமை­தி­வழிப் போராட்ட மொன்று நடத்­தப்­பட்­டது.
 
தங்­களின் மனித உரி­மைகள் பாரி­ய­ளவில் பறிக்­கப்­பட்­டுள்ளமை தொடர்பில் கவ­னத்தை ஈக்­கவும், தங்­களின் தற்­போ­தைய அவல நிலைக்குப் பரி­காரம் தேடு­வ­தற்­கு­மென காணா­மற்­போனோரின் பெற்றோர், வாழ்க்­கைத்­து­ணைகள் மற்றும் நெருங்­கிய உற­வி­னர்­களால் அமை­தி­வழி ஆர்ப்­பாட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது. அதில் சிவில் சமூக மற்றும் ஜன­நா­யக முறையில் தெரிவு செய்­யப்­பட்ட மக்கள் பிர­தி­நி­திகளும் பங்­கேற்­றி­ருந்­தனர். முற்­று­மு­ழுக்க அமை­தி­யான முறையில் நடை­பெற்ற குறித்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்தோர் நீதி வழங்­கு­மாறு கோரும் சுலோக அட்­டை­களை ஏந்­திய வண்ணம் சென்று கொண்­டி­ருந்­தனர். ஸ்தலத்தில் பொலிஸார் சிலரும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­த­தாக நான் அறிகின் றேன்.
 
சிறிது நேரத்தின் பின்னர், துணியால் தங்கள் முகங்­களை மூடி­ம­றைத்துக் கொண்­டி­ருந்த ஒரு சிலர் உள்­ளிட்ட சில நபர்கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது தாக்­கு­தலை ஏவியும் கைகளால் அவர்­க­ளைத்­தாக்­கி­யு­முள்­ளனர். ஆர்ப்­பாட்­டக்காரர்கள் ஏந்­தி­வந்த சுலோக அட்­டை­களும் பறிக்­கப்­பட்டு சுக்கு நூறாக கிழித்­தெ­றி­யப்­பட்­டுள்­ளன. அர­சாங்­கத்­திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தக் கூடா­தென மேற்­படி அமைதி வழிப் போராட்­டத்தில் ஈடு­பட்டோர் எச்­ச­ரிக்­கப்­பட்­ட­துடன் அவர்­களில் சிலர் காயங்­க­ளுக்கும் உள்­ளா­கினர்.
 
அமை­தி­யான முறையில் போரா­டியோர் மீது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இத்­த­கைய தாக்­குதல் சம்­ப­வ­மா­னது, அக்­கி­ர­ம­மா­னது மட்­டு­மின்றி, எதேச்­சா­தி­கார அணு­கு­முறை யொன்றை பிர­தி­ப­லிக்கும் நட­வ­டிக்­கை­யொன்­றா­கவும் அமை­வ­துடன், மனித உரி­மைகள் தினத்­தன்று மனித உரி­மை­களை வலி­யு­றுத்தி அமை­தி­யான முறையில் போரா­டிய தங்கள் மக்­களின் உரி­மை­களைப் பறித்­தெ­டுக்கும் மிகவும் பாரி­ய­தொரு மனித உரிமை மீறல் சம்­ப­வ­மா­கவும் அமைந்­துள்­ளது. அத்­துடன், நாட்டில் சட்­ட­வாட்சி முற்று முழுதா கவே சீர்குலைந்துள்ளதையும் இச்சம்பவம் காண்பிக்கின்றது.
 
இந்த பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து பொருத்தமான நடவடிககை எடுக்கப்படுமென்ற அதீத எதிர்பார்ப்பில், தங்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவரு வது எனது தார்மீகக் கடமையென நான் கருதுகின்றேன்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...