17th of December 2013
குற்றங்களை இல்லாதொழிக்க ஷரீஆச் சட்டத்திற்கு நிகரான சட்டமுறைமையொன்றை நாட்டினுள் அமுல்படுத்த வேண்டும் அவ்வாறின்றி குற்றச்செயல்களை ஒழிக்க முடியாது என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிடுகிறார்.
கம்புறுப்பிட்டிய மாஸ்முல்ல பிரதேசத்தில் கொலைசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகள் இருவருக்குமாக பணஉதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஷரீஆச் சட்டத்தால் அவ்வப்போதே குற்றங்களுக்கான தண்டனை வழங்கப்படுவதால், அதற்கு நிகரான சட்டமொன்றும் அதனுடன் தொடர்புற்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியமுள்ளதெனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டிய தேவையுள்ளது எனவும் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment