16th of December 2013
இலங்கையிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட கெளதம புத்தரின் பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெளதம புத்தரின் கேசம், பற்கள், எலும்புகளைக் கொண்ட தங்கப் பேழையொன்றே திருடப்பட்டுள்ளதாக கம்போடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலைப் பிராந்திய புனித ஸ்தலமொன்றிலிருந்து களவாடப்பட்ட அநேக சிறிய திருவுருவ சிலைகள் கடந்த வாரம் உடோங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் புனித சின்னங்களைக்கொண்ட பேழையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என கம்போடிய பொலிஸ் பேச்சாளர் கிர்த் சந்தாரித் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பேழையை தேடி வருவதாகவும் திருட்டுடன் தொடர்புடைய 5 காவலர்களை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment