Sunday, December 15, 2013

மேல் மாகாண முத­ல­மைச்சர் பத­விக்குப் போட்­டி: ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர!

16th of December 2013
மேல் மாகாண முத­ல­மைச்சர் பத­விக்குப் போட்­டி­யி­டு­வ­தற்­கென காலஞ்­சென்ற பாரத லக்ஷ்மன் பிரே­மச்­சந்­தி­ரவின் புதல்வி ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக த சண்டே லீடர் ஆங்­கில வார இதழ் தெரி­வித்­துள்­ளது.
 
இது குறித்து அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை நேரில் சந்­தித்து இது குறித்து பேசு­வ­தற்கு ஹிரு­ணி­காவும் அவ­ரது தாயாரும் எதிர்­பார்த்­துள்­ளனர்.
 
காலஞ்­சென்ற பாரத லக்ஷ்மன் பிரே­மச்­சந்­தி­ரவின் கொலை வழக்கு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கென எதிர்­வரும் ஜன­வரி ஆறாம் திகதி எடுக்­கப்­பட்­டதன் பின்னர் மேல் மாகாண முத­ல­மைச்சர் பத­விக்குப் போட்­டி­யி­டு­வ­தற்­கான தனது நோக்கம் குறித்து ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர பகி­ரங்­க­ர­மாக அறி­விப்­பா­ரென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
 
மேற்­படி பத­விக்குப் போட்­டி­யி­டு­வ­தற்­கான தனது வேண்­டு­கோ­ளுக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இணக்கம் தெரி­விப்­பா­ராயின் மேற்படி வழக்கு விசாரணையின் பின்னர் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்தும் அவர் அறிவிப்பாரெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...