Friday, December 20, 2013

தொழிலுக்காக வெளிநாடு சென்ற 16 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் இல்லை!

20th of December 2013
மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்றிருந்த 16 இலங்கையர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்றது.
 
இந்த நபர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனங்களுடன் கூட்டாக ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய தெரிவித்தார்.
 
பல வருடங்களாக இந்த இலங்கையர்கள் குறித்து எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
 
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ளவர்களிடம் இருந்து இந்த வருடத்திற்குள் சுமார் 1800 முறைபாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...