Friday, January 17, 2014

அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்!

sss1713
Friday,17th of January 2014
அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக சிறிலங்கா வெளிவிவக அமைச்சர் ஜி . எல் . பீரிஸ் , வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
 
அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் , 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று சென் . அந்தனிஸ் மைதானம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது .இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில் , அதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது .எனினும் அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடே என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார் .
 
இந்தநிலையிலேயே , இது நியாயமற்றது என்றும் , சோடிக்கப்பட்ட , நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டு என்றும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் இதுகுறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க முடிவு செய்துள்ளது .சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி . எல் . பிரீஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து அமெரிக்காவின் இந்த நியாயமற்ற கருத்து தொடர்பாக முறையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக சேனுக்கா செனவீரத்ன நியமிப்பு!

Friday,17th of January 2014
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக சேனுக்கா செனவீரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கருணாரத்ன அமுனுகம செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றிவந்த சேனுக்கா செனவிரத்ன புதிய வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைகாலமும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிவந்த கருணாதிலக அமுனுகம ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருணாதிலக அமுனுகம மற்றுமொரு அமைச்சில்பதவியொன்றை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday,17th of January 2014
தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் இனவாதத்தை தூண்டி நாட்டில் பிரிவினைவாதத்தை ஊக்குவிதது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டாது, சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினர் சரியான பாதையை காட்டுவதனை விடவும், சேறு பூசுவதில் நாட்டம் கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் எந்தவொரு இடத்தில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள் எனத் தெரிவித்துள்ளார்.

அச்சமோ சந்தேகமோ இன்றி அனைவரும் வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் தமக்கு உள்ள கடமைகளிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனந்தி சசிதரன் புனிதரல்ல – பாதுகாப்பு அமைச்சு!

Friday,17th of January 2014
வட மாகாண சபையின் உறுப்பினர் ஆனந்த சசிதரன் ஓர் புனிதரல்ல என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எனினும், ஆனந்த சசிதரனுக்கும் புலிகளுக்கும் இடையிலான கடந்தகால உறவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

யுத்த காலத்திலும் அதன் பின்னரும் ஆனந்தி சசிதரனின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாட்டுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக ஆனந்தியின் கணவர் எழிலன் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஊடறுக்கும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் துறையை உருவாக்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனந்தி சசிதரனுக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே தாக்கப்பட்டதாகவும், அரசியல் போர்வையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் - அமெரிக்கா!

Friday,17th of January 2014
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சட்டம் மற்றும் நீதித்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுக்கிற்கான சிவில் சமூகத்தின் ஆதரவு என்ற சட்டத்தரணிகள் சங்கத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாண்டு விசேட திட்டமொன்றின் மூலம் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சட்டத்துறை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வழியமைக்கும் என அறிவித்துள்ளார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்துவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நூலகம் மற்றும் கேட்போர் கூடத்தை புனரமைக்கவும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Thursday, January 16, 2014

கடற்கொள்ளையரை எதிர்கொள்ள கடற்புலிகளை தோற்கடித்த அனுபவங்கள் கைகொடுக்கும்: அமைச்சர் நியோமல் பெரேரா கூறுகிறார்!

News ServiceThursday,16th of January 2014
இந்து சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களை எதிர்கொள்ளவும் வளைகுடா நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் கடற்புலிகளை தோற்கடித்து அழித்தொழித்த இலங்கையின் அனுபவங்கள் பெரும் பயன்தரக்கூடியவை என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா
 
 ஓமான் ட்றிபியூன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.“சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை செய்யவுள்ள இலங்கை, அரபு நாடுகளுக்கான தென் கிழக்காசிய நுழைவாயிலாக வரவுள்ளது. தென் கிழக்காசிய நாடுகளுக்கான கடல் பாதையில் உள்ள கொழும்பு துறைமுகம், பெரிய தாய்க் கப்பல்களையும் உள்வாங்கும் தகுதியுள்ளது.
 
எனவே இலங்கை, வளைகுடா நாடுகளுக்கான மீள் ஏற்றுமதி மையமாக மாற முடியும். ஓமான் உட்பட வளைகுடா நாடுகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கும் பொருட்களை எம்மால் சிறு கப்பல்கள் மூலம் இந்த பிராந்தியத்திலுள்ள வேறு நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடியும்" என பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மேலும் தெரிவித்தார்
 
 

எதிர்வரும் 30ம் திகதி முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்!

எதிர்வரும் 30ம் திகதி முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்Thursday,16th of January 2014
எதிர்வரும் 30ம் திகதி முதல் மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
எதிர்வரும் 30ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ம் திகதி வரையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு மாகாணசபைகளும் இந்த வாரத்தில் கலைக்கப்டப்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வாரங்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 15, 2014

யாழ்.போதனா வைத்தியசாலையின் மற்றொரு தொழிற்சங்க பணியாளர்கள் இன்று காலை முதல் அடையாளப்போராட்டம்!

Thursday,16th of January 2014
யாழ்.போதனா வைத்தியசாலையின் மற்றொரு தொழிற்சங்க பணியாளர்கள் இன்று காலை முதல் அடையாளப்போராட்டமொன்றில் குதித்துள்ளனர்.இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் சுகாதார சிற்றூழியர்களே இன்று காலை சுமார் ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

யாழ் போதனா வைத்தியசலை  சுகாதார சிற்றூழியர்களான இவர்கள் இன்று காலை 7மணி தொடக்கம் 12 மணி வரையான ஜந்து மணிநேர அடையாளப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.தமது ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டனர்;. தமக்கான கொடுப்பனவுகள் லீவுகள் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளினில் பரிசாரகர்களுக்காக ஒரு வருட காலப்பயிற்சி ,முறையற்ற பதில் கடமை நியமனங்கள் வழங்குவதை தவிர்த்தல் என்பற்றினை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் குறித்த அமைப்பின் யாழ்.பிராந்திய செயலாளர். ஜெயரூபன் கருத்து தெரிவிக்கையில், தாம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே 5மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும் இந்த பணிப்புறக்கணிப்பு இன்று 12மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.ஆயினும் இந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் தமது போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே யாழ்.போதனா வைத்தியசாலையினில் தொடரும் இத்தகைய போராட்டங்களினால் அன்றாட செயற்பாடுகள் மந்த கதியினை அடைந்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதாரத் தகவல்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி!

Thursday,16th of January 2014அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதாரத் தகவல்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி எழுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொருளாதாரப் புள்ளி விபரத் தகவல்களின்; நேர்மைத்தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளி விபரவியல் திணைக்களமும், மத்திய வங்கியும் வழங்கிய நம்பகமற்ற தகவல்களினால் சர்வதேச நாணய நிதியத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கற்பனை பொருளாதார வளர்;ச்சியிலேயே இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போலியான தகவல்களினால் கொள்கை வகுப்பதில் சிக்கல் நிலைமைகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். இது நாட்டின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களில் உண்மையில்லை எனவும், வறியவர்கள் பற்றிய புள்ளி விபரத் தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலுக்காக வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் முறைப்பாடு!

Wednesday,15th of January 2014
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக  சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து  முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.
 
ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கல ரன்தெணிய கூறுகின்றார்.
 
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வபர்களுக்கான ஒப்பந்த காலம் 2 வருடங்களாக இருப்பதுடன் இந்த காலப்பகுதியில் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் நாடு திரும்ப முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது.
 
இது தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும் என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் கூறுகின்றார்.
 
கடந்த வருடம் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் இவர்களுள் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் கோரிக்கைகளை  முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
இது தொடர்பில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் தெளிவூட்டப்பட்ட போதிலும் அங்கு சென்ற பின்னர் சிலர் மீண்டும் நாட்டிற்கு வர முயற்சிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

Sunday, January 12, 2014

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மீன்பிடி அமைச்சருடன் பேச்சு ராஜித சேனாரத்ன!

n133Sunday,12th of January 2014
எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடற்றொழில் , நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று வீரகேசரிக்குத் தெரிவித்தார் .
 
இந்தியத் தலைநகரமான புதுடில்லியில் 15 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்வர் . இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் சங்கங்களின்ஆலோசகர் என் . தேவதாஸ் கலந்து கொள்வார் .
 
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றத்திற்காக 234 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததற்காக 102 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது .
 
அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சின் அதிகாரிகளும் யாழ்ப்பாணம் , மன்னார் , முல்லைத்தீவு மீனவர் சங்கங்க ளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விசேட கூட்டமொன்று 15 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் புதுடில்லியில் நடைபெறுமெனவும் அமைச்சர் தெரிவித்தார் . இந்தக் கூட்டத்தில் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்வர் .
 
புதுடில்லியில் நடைபெறும் கூட்டங்களில் தமிழக முதலமைச்சரோ அல்லது மீன்பிடி அமைச்சரோ கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார் .
 

அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளன!

lion airSunday,12th of January 2014
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நோக்கில் அவ் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் இன்று இரண்டாம் நாளாக யாழ் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன .
 
 நேற்று காலை 10 மணி தொடக்கம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இன்று பி . ப 4 மணியுடன் நிறைவடைகிறது . இதுவரை விமானத்தில் பயணித்த 17 பேரது ஆடைகளை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
 
sss1224Sunday,12th of January 2014
பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
 
புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றினைத் துப்பரவு செய்துகொண்டிருந்த பொழுது இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர் .
 
இதேவேளை யாழில் கோப்பாய்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பற்றை ஒன்றிற்குள்ளிருந்து நேற்று முன்தினம் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
 

23 பேரின் போலி அடையாள அட்டை விண்ணப்பங்கள் போலியானவை!

Sunday,12th of January 2014
கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களுள், 6500 விண்ணப்பங்கள் இவ்வாறு சந்தேகத்துக்கு இடமானவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
 
போலியான ஆவனங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 23 பேரின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களம் குற்றப் புலனாய்வு தரப்பிடம் வழங்கியுள்ளது.
 
அவர்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 23 விண்ணப்பங்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு தரப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...