Wednesday, December 18, 2013

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பெயர்களை பயன்படுத்தி செயற்பட்டுவந்த 300 பேர் மீது விசாரணை!

19th of December 2013
ஜனா­தி­பதி உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களின் பெயர்­களைப் பயன்­ப­டுத்தி செயற்­பட்­டு­வந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்ற 300 பேர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்சர் லக் ஷ்மன் சென­வி­ரத்ன நேற்று சபையில் தெரி­வித்தார்.
 
பாரா­ளு­மன்­றத்தி நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் தெரி­வுக்­குழு அறிக்­கை­யிடல் மீதான அமைச்­சுக்­களின் கீழான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
 
நேற்­றைய விவா­தத்தின் போது உரை­யாற்­றிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாத்­தறை மாவட்ட எம்.பி. மங்­கள சம­ர­வீர, மாணிக்­கக்­கற்கள் பதிக்­கப்­பட்­டதும் 800 வரு­டங்கள் பழை­மை­யா­ன­து­மான தொல்­பொருள் ஒன்றை ஜப்­பா­னியப் பிரஜை ஒரு­வ­ருக்கு விற்­பனை செய்­ய­முற்­பட்ட போது அது பொலி­ஸா­ரிடம் அகப்­பட்­ட­தாகப் பத்­தி­ரி­கை­களில் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­த­தா­கவும், இதன் பின்­ன­ணியில் ஜனா­தி­ப­தியின் இணைப்­பாளர் ஒருவர் செயற்­பட்­டி­ருந்­த­தா­கவும் கூறி­யி­ருந்தார்.
 
இதற்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே அமைச்சர் லக்ஷ்மன் சென­வி­ரத்ன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
மேலும் இடம்­பெற்று வரு­கின்ற விசா­ரணை நட­வ­டிக்­கை­களின் பின்னர் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் யார் என்­பது குறித்து வெளிப்­ப­டுத்­தப்­படும் என்றும் கூறினார்.
 
அது­மாத்­தி­ர­மின்றி, மங்­கள சம­ர­வீர எம்.பி. கூறு­வ­து­போன்­ற­தொரு இணைப்­பாளர் ஜனா­தி­ப­திக்குக் கிடை­யாது என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியினதும் முக்கியஸ்தர்களினதும் பெயர்களை விற் றுப்பிழைக்கும் நபர்கள் தொடர்பில் விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்றார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...