Saturday, December 21, 2013

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி கட்சியை அழிக்கும் வகையில் ஜனாதிபதி: ரணில் விக்கிரமசிங்க!

21st of December 2013
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி கட்சியை அழிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் இன்று  இடம்பெற்ற கட்சியின் வருடாந்த மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலத்தை விட தற்போதே பெரும் கஷ்டத்துக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

நூற்றுக்கு ஒரு வீதமானவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். ஏனையவர்கள் துன்பத்தில் உள்ளனர். அவர்களை அதிவேகமான ஓடிவருமாறு ராஜபக்ஷ அரசாங்கம் கூறுவதாக ரணில் தெரிவித்தார்.

சந்திரிக்கா ஆட்சி செய்த காலத்தை விட தற்போது கடன் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை பிற நாடுகளிடம் பெருமளவு கடன் பெற்றுள்ளதாகவும் ரணில் சுட்டிக் காட்டினார்.

இன்னும் 3 வருடத்தில் கெசினோ 3 இருப்பதாக மஹிந்த தெரிவிப்பார் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை விரும்புவதாகவும் ரணில் மேலும் கூறினார். 
 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...