Wednesday, December 11, 2013

அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளே இனப்பிரச்சினைக்கான காரணம்: ஸ்ரீரங்கா!

11th of December 2013
அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளே இன்பிரச்சினைக்கான காரணம் என பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளுக்கும் அமைச்சர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காணிக்கென தனியான அமைச்சு காணப்படுகின்றது எனவும் சிலர் அமைச்சர்கள் தாமே அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பானவர்கள் எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் ஈட்டும் முனைப்புக்கள் நிறுத்தப்பட வேண்டுமென அவா வலியுறுத்தியுள்ளர்.

நுவரெலியா பிரதேச மக்கள் மின்சாரக் கட்டத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நுவரெலியா மக்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...