Saturday, December 14, 2013

எதிர்­வரும் காலங்­களி்ல் வாகன ஓட்டுநர்கள் தொடர்பில் கடுமையான சட்டங்கள்:சீ.பி.ரத்­னா­யக்க!

14th of December 2013
எதிர்­வரும் காலங்­களி்ல் வாகன ஓட்­டு­நர்கள் தொடர்பில் புதிய கடு­மை­யான சட்­டங்­களை அமுல்­ப­டுத்­தப்­போ­வ­தாக தெரி­வித்த தனியார் போக்­கு­வ­ரத்து துறை அமைச்சர் சீ.பி.ரத்­னா­யக்க மோட்டார் சைக்­கிள்­களில் தலைக்­க­வசம் இல்­லா­மலும், ஒரு கைப்­பி்­டியை மட்டும் பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்­கிளை செலுத்­துதல் மற்றும் தொலை­பே­சியி்ல் உரை­யாடிக் கொண்டு வாகனம் செலுத்­து­வோ­ருக்கு எதி­ரா­கவே கடும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தெ­னவும் அமைச்சர் சபையில் நேற்று தெரி­வித்தார்.
 
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற போக்­கு­வ­ரத்து அமைச்சு மீதான குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ரத்­னா­யக்க இதனைத் தெரி­வித்்தார்.
 
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
 
பாட­சாலை பஸ்­களில் ப­ய­ணிக்கும் பிள்­ளை­களின் பாது­காப்பை உறுதி செய்யும் வகையில் அப்­பிள்­ளை­களின் பெற்­றோ­ருக்கு குறுஞ்­செய்தி அனுப்பும் முறை­மை­யொன்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
 
பஸ் சேவையை சிறப்­பான முறையில் நடத்­து­வ­தற்கு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. பஸ்ஸில் சீ.சீ.டிவி மற்றும் ஜீ.பி.எஸ் பொருத்­தப்­ப­ட­வுள்­ளது. அத்­தோடு சார­திகள், நடத்­து­னர்­கள் பய­ணி­க­ளுக்கு சேவை­களை நல்ல முறையில் முன்­னெ­டுக்­கின்­றார்­களா என்­பதும் கண்­கா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.
 
விபத்­துக்­களை தவிர்ப்பதற்கான நட வடிக்கைகள் எடுக்கபடவுள்ளதோடு அனர்த்தங்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்ப டவுள்ளன என்றார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...