Monday, December 30, 2013

தேர்தல்கள் செயலகத்தின் புதிய தீர்மானம்!

31st of December 2013
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் விருப்பு வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்குள் வேட்பாளர்களை அனுமதிப்பது குறித்து தேர்தல்கள் செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.
 
எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் இந்த முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்சியின் வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட பின் விருப்பு வாக்கு எண்ணும் தருணத்தில் வேட்பாளரை உள் அனுமதிக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
 
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் இவ்வாய்ப்பு வழங்கப்பட மாட்டதெனவும் வெற்றிபெறும் கட்சியின் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் அடிப்படையில் அடுத்த தேர்தலில் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தின் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.
 
இதற்கு முன்னர் ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு மாத்திரமே விருப்பு வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3ம் திகதி சந்திக்க தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.
 
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பாகவே அமையும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...