Saturday, December 14, 2013

வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் தகவல் வழங்க அச்சம் கொள்ள தேவையில்லை: மக்ஸ்வெல் பரணகம!

14th of December 2013
வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்குவதற்காக வடக்கு கிழக்கு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாக குறிப்பிட்டு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள் காணாமற்போன தமது உறவினர்கள் குறித்த தகவல்களை வழக்க பின்னிற்பதாக காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காணாமற்போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காலம் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தபோதும் பல நிறுவனங்களின் மூலமாக விடுக்கப்பட்ட கோரிக்கையின்படி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த கால நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் காலம் இம் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...