Tuesday, December 24, 2013

விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வுமே இன்றைய தேவை. தேசிய நத்தார் விழாவில் அமைச்சர் றிஸாட்!

24th december 2013
விட்டுக்கொடுப்பும் , புரிந்துணர்வுமே இன்று தேவையாக இருப்பதாக அமைச்சர் றிஸாட்
பதியூதீன் தெரிவித்திருக்கின்றார் .
 
மன்னாரில் இடம்பெற்ற தேசிய நத்தார் விழாவில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார் .
 
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அணுசரனையுடன் மன்னார் மாவட்ட செயலகம் நடாத்திய தேசிய நத்தார் விழா நேற்று திங்கடக்கிழமை மாலை ( 23.12.203 ) மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றது .
 
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை. எஸ் . தேசப்பிரிய தலமையில் இடம் பெற்ற தேசிய நத்தார் விழாவில் மன்னார் ஆயர் இராயேப்பு ஜேசேப்பு ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க குருமார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர் .
 
இதன் போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,,,,
 
ஒவ்வொரு மதமும் , இன , மத ஒற்றுமையினைத்தான் எடுத்துக் கூறுகின்றது . விட்டுக் கொடுப்பும் , புரிந்துணர்வுமே இன்று எமக்கு தேவையாக இருக்கின்றது .
 
அதனை ஏற்படுத்திக் கொள்ள இந்த ' தேசிய நத்தார் விழா ' நிகழ்வு ஒரு சந்தரப்பமாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரவித்திருக்கின்றார் .
 
இதனிடையே நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் ஆயார் உரையாற்றுகையில் ,
 
கடவுள் அன்பை விரும்புபவர் , அன்பு செலுத்தும் இடத்தில் கடவுளை காணலாம் . அதே போல் நாம் கடவுளுக்கு அன்பு செலுத்தினால் தான் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் எனவும் தெரிவித்திருக்கின்றார் . இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் வருகையும் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...