Sunday, January 12, 2014

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மீன்பிடி அமைச்சருடன் பேச்சு ராஜித சேனாரத்ன!

n133Sunday,12th of January 2014
எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடற்றொழில் , நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று வீரகேசரிக்குத் தெரிவித்தார் .
 
இந்தியத் தலைநகரமான புதுடில்லியில் 15 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்வர் . இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் சங்கங்களின்ஆலோசகர் என் . தேவதாஸ் கலந்து கொள்வார் .
 
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றத்திற்காக 234 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததற்காக 102 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது .
 
அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சின் அதிகாரிகளும் யாழ்ப்பாணம் , மன்னார் , முல்லைத்தீவு மீனவர் சங்கங்க ளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விசேட கூட்டமொன்று 15 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் புதுடில்லியில் நடைபெறுமெனவும் அமைச்சர் தெரிவித்தார் . இந்தக் கூட்டத்தில் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்வர் .
 
புதுடில்லியில் நடைபெறும் கூட்டங்களில் தமிழக முதலமைச்சரோ அல்லது மீன்பிடி அமைச்சரோ கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார் .
 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...