Wednesday, January 15, 2014

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதாரத் தகவல்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி!

Thursday,16th of January 2014அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதாரத் தகவல்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி எழுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொருளாதாரப் புள்ளி விபரத் தகவல்களின்; நேர்மைத்தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளி விபரவியல் திணைக்களமும், மத்திய வங்கியும் வழங்கிய நம்பகமற்ற தகவல்களினால் சர்வதேச நாணய நிதியத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கற்பனை பொருளாதார வளர்;ச்சியிலேயே இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போலியான தகவல்களினால் கொள்கை வகுப்பதில் சிக்கல் நிலைமைகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். இது நாட்டின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களில் உண்மையில்லை எனவும், வறியவர்கள் பற்றிய புள்ளி விபரத் தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...