Friday, January 17, 2014

அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்!

sss1713
Friday,17th of January 2014
அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக சிறிலங்கா வெளிவிவக அமைச்சர் ஜி . எல் . பீரிஸ் , வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
 
அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் , 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று சென் . அந்தனிஸ் மைதானம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது .இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில் , அதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது .எனினும் அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடே என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார் .
 
இந்தநிலையிலேயே , இது நியாயமற்றது என்றும் , சோடிக்கப்பட்ட , நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டு என்றும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் இதுகுறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க முடிவு செய்துள்ளது .சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி . எல் . பிரீஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து அமெரிக்காவின் இந்த நியாயமற்ற கருத்து தொடர்பாக முறையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...