Friday, January 10, 2014

ஜனாதிபதிக்கும் -இஸ்ரேல் ஜனாதிபதிக்குமிடையே சந்திப்பு!

Saturday,11th of January 2014
இஸ்ரேல் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை ஜெரூசலம் நகரிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரெஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பெரிதும் பாராட்டிய இஸ்ரேலிய ஜனாதிபதி ‘ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நன்மைகள் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்' என்றும் 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அபிவிருத்தியையும் நாட்டு மக்களிடையே ஐக்கியத்தையும் மேலோங்கச் செய்துள்ள ஜனாதிபதியின் செயற்பாடுகளை இஸ்ரேலிய ஜனாதிபதி பெரிதும் பாராட்டினார்.
 
செழுமையான வரலாற்றையும் புத்தி சாதுரயமுள்ள மக்களையும் இலங்கை கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது இஸ்ரேலிய அரசினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு
ஜனாதிபதி தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.   

மேலும் இஸ்ரேல் -பலஸ்தீன் மோதலுக்கு தீர்வாக இரு நாடுகளிலும் வேறு ஆட்சிகளை அமைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிபார்சுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
 
இதனையடுத்து, இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் வர்த்தக பிரமுகர்களை ஜனாதிபதி சந்தித்ததுடன் இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதனையடுத்து ஜரூசலம் வனவியல் பூங்காவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஞாபகர்த்தமாக ஒலிவ் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.
 
இந் நிகழ்வின்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சின் மேற்பார்வை எம்பி சஜித் வாஸ் குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் சரத் டி விஜேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...