Tuesday, December 24, 2013

பேஸ்புக் குற்றங்கள் தொடர்பில் 1,200 முறைப்பாடுகள்!

24th December 2013
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக வலைத்தளமான பேஸ்புக் குற்றங்கள் தொடர்பில் 1,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
 
அதிகளவிலான முறைப்பாடுகள் பேஸ்புக் போலி கணக்குகள் தொடர்பில் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த குறிப்பிட்டார்.
 
அவ்வாறான கணக்குகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
சில கணக்குகளை பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவித்ததன் பின்னர், நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்தார்.
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரையும் பேஸ்புக்கில் நண்பர்களாக இணைத்துக்கொள்வதே சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...