Tuesday, December 24, 2013

யாழ். கோப்பாயில் விசா விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு இந்திய பிரஜைகள் கைது!

24th December 2013
யாழ். கோப்பாயில் விசா விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவ்விரு இந்திய பிரஜைகளும் நேற்று  மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்களிடம் இருந்து சாரி உள்ளிட்ட விற்பனை பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை இலங்கைக்கு கொண்டு வந்த  இருவர் கைது!
 
சட்டவிரோதமாக ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தை இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் இருந்து இன்று  அதிகாலை 4 மணியளவில் இலங்கை வந்த இரு வெளிநாட்டு பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 20 அமெரிக்க டொலர் தாள்கள் 40, 50 அமெரிக்க டொலர் தாள்கள் 40, 50 சுவிஸ் பிரேங்க் தாள்கள் 12 இலங்கை சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த வெளிநாட்டு நாணயங்களின் இலங்கை பெறுமதி 4 லட்சம் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளைத் தாள்கள் போன்று காட்சியளித்த இவற்றை இரசாயன பதார்த்தம் கொண்டு சுத்தம் செய்த போது அவை வெளிநாட்டு நாணயம் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஆப்பிரிக்க பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...