Saturday, December 21, 2013

இலங்கைக்கு எதிராக சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்த போர்க்குற்ற காணொளி ஆதாரங்கள் போலியானவை: பிரதிபா மஹநாமஹேவா!

21st of December 2013
இலங்கையில், பயங்கரவாதத்தை தோற்டித்து வெற்றி பெற்று ஜனநாயகத்தை போற்றும் இலங்கை போன்ற நாட்டுக்கு எதிராக மனித உரிமை மீறல் சம்பந்தமாக யோசனைகளை கொண்டு வருவது கேலிக்குரியது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் மூன்று நிபந்தனைகள் உள்ளன.
 
அதில் முக்கியமான நிபந்தனை இலங்கை நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையான அமுல்படுத்துவது.
இதுவரை அந்த பரிந்துரைகளில் பெரும்பாலான பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்தியுள்ளது. ஏனைய பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
 
இலங்கைக்கு எதிராக சனல் 4 தொலைக்காட்சி முன்வைத்த காணொளி குறித்தும் விசாரணை நடத்துமாறு கூறப்பட்டது.
 
இது குறித்து மொறட்டுவ பல்லைக்கழகத்தின் நிபுணர்கள் பல கோணங்களில் ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் அந்த காணொளிகள் போலியானவை என்ற முடிவுக்கு வந்தனர்.
 
இதன் பின்னர் சனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றங்களை சுமத்தி மற்றுமொரு காணொளியை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்த முயற்சித்தது. கெலும் மக்ரே இந்தியாவுக்கு வரவும் இடமளிக்கப்படவில்லை. எனினும் அந்த காணொளி மற்றுமொரு பொய்.
 
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு மக்ரே உட்பட சனல் 4 தொலைக்காட்சியின் குழுவினர் நாட்டுக்குள் வந்தனர். அவர்கள் மேலும் ஒரு காணொளியை தயாரித்து அடுத்த மார்ச் மாதம் மனித உரிமை ஆணைக்குழுவை இலக்கு வைத்து திரையிட முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...