Saturday, December 21, 2013

இலங்கை மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்க மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய பாகிஸ்தான் சபாநாயகர்!

21st of December 2013
இலங்கை அதன் மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்க மேற்கொண்ட முயற்சிகளை பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் ஆயாஸ் சாதிக் பாராட்டியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் சபாநாயகர் மரியாதை நிமித்தமாக கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த போதே இதனை கூறினார்.
 
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் அனைத்து நிலைகளிலும் வெளிப்படையான வரலாற்று ரீதியான பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய ஆழமான நட்புறவு இருந்து வருகிறது.
 
பாகிஸ்தான் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாடுகளுக்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடித்தமை தொடர்பில் இலங்கையை பாராட்ட வேண்டும் என்றார்.
 
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் உதவிகளையும் ஆதரவுவை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...