Wednesday, December 18, 2013

இரத்தப் பரிசோதனைக்கு வந்த வயோதிபப் பெண்ணின் தங்கநகைகள் அபகரிப்பு!

19th of December 2013
இரத்தப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த வயோதிபப் பெண்ணொருவரின் தங்கநகைகளை வைத்தியசாலை ஊழியர்ரென தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அபகரித்துச்சென்றுள்ளார்.
 
தீவுப்பகுதியிலிருந்து வந்த வயோதிபப் பெண்ணொருவரின் 6 பவுண் தங்கநகைகளே இவ்வாறு அபகரித்துச்செல்லப்பட்டுள்ளன.
 
யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை காலை இரத்தப் பரிசோதனைக்காக மேற்படி வயோதிபப் பெண் வந்துள்ளார். இந்நிலையில், மேற்படி வயோதிபப் பெண் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு செல்லத் தயாரானபோது அவரின் தங்கநகைகளை தான் வைத்திருப்பதாக தன்னை வைத்தியசாலை ஊழியரென அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் கூறியுள்ளார்.
 
இதனை நம்பி தனது தங்கநகைகளைக் கொடுத்துவிட்டு இரத்தப் பரிசோதனை செய்துவிட்டு திரும்பிவந்த வயோதிபப் பெண், அந்த நபரைக் காணாது திகைத்து நின்றார். இதனைத் தொடர்ந்து மேற்படி வயோதிபப் பெண்ணின் தங்கநகைகளை குறித்த நபர் அபகரித்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...