Thursday, December 19, 2013

யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள், கொலைகள், கொள்ளைச் சம்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன: சுந்தரம் அருமைநாயகம்!

19th of December 2013
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை பதிவு செய்வதையே யாழ். மாவட்டப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற அதேவேளை, குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவோ அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவோ தெரியவில்லையெனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள், கொலைகள், கொள்ளைச் சம்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. யாழ். பொலிஸார் குற்றச் செயல்களை மாத்திரம் பதிவு செய்துவிட்டு தங்களது கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றார்கள்.
குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவது குறைவடைந்துள்ளதால், யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...