Thursday, December 19, 2013

சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு: இலங்கை அரசாங்கம் மறுப்பு!

19th of December 2013
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவை பெறுவதற்காக சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
 
நாட்டின் உண்மையான  நிலைமைகளை கண்டறிய சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
கள் தனிப்பட்ட ரீதியில் இலங்கைக்கு வருகை தந்தனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்துவது போல் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் அழைத்து வரவில்லை.
 
வழக்கமாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை லண்டனுக்கு சுற்றுலா பயணம் செல்வது போல் அவர்கள் இங்கு வந்துள்ளனர் என்றார்.
பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உட்பட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
 
அத்துடன் அவர்களின் பெயர் விபரங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
அதேவேளை பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற்ற போது இஸ்ரேலில் இருந்து இரகசியமான முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்ததாகவும் மங்கள சமரவீர தகவல் வெளியிட்டிருந்தார்.

இஸ்ரேல் பிரதிநிதிகள் இலங்கை வந்த தனியார் விமானம் பற்றிய தகவல்களை வெளியிட்ட மங்கள எதற்காக இஸ்ரேல் பிரதிநிதிகள் இலங்கை வந்தனர் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இஸ்ரேல் பிரதிநிதிகள் பொதுநலவாய நாடுகளி வர்த்தக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தாக தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...