Thursday, December 19, 2013

வடக்கு மாகாண வரவு செலவுத் திட்டம் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை!

19th of December 2013
வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பேரவைச் செயலகத்தின்இன்னமும் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் கடந்த 10, 11, 12 ஆம் திகதிகளில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் இடம் பெற்றது. இதன் பின்னர் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டிருந்தது. இவ்வாறு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவரின் அனுமதி பெறப்பட்டாலே, அங்கீகரிக்கப்பட்டதாக அமையும்.

இதுவரை வரவு செலவுத் திட்டம் வடக்கு மாகாணப் பேரவைச் செயலகத்தினால், வடக்கு மாகாணப்பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்படவில்லை எனவும், இதனால் அது ஆளுநரின் ஒப்பத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லையென பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தெரிவித்தார்.

பேரவைச் செயலகம் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் (வயது 74)  மற்றும் செயலாளர் கிருஸ்ணமூர்த்தி (வயது 83) ஆகிய இருவராலும் நிர்வகிக்கப்படுகின்றது.  

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...