Monday, December 30, 2013

விக்கினேஸ்வரன் மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

ai2130th of December 2013
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் , அரசாங்கத்துடன் இணைந்து
செயற்பட தயாராகவே உள்ளார் . ஆனால் சம்பந்தனின் பிடிவாதமே விக்னேஸ்வரனை தடுக்கின்றது . தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் இணைத்தால் அதுவே ஜனநாயகத்தின் பெரிய வெற்றியாகும் விக்கினேஸ்வரனின் சம்பந்தியுமான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் .
 
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
 
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அரசாங்கத்துடன் இணங்கி வட மாகாண செயற்பாடுகளை நடத்தவே விரும்புகின்றார் . வடக்கிற்கான அபிவிருத்திகளை தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று அமைதியாக ஆட்சி நடத்த வேண்டுமென்பதே வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அவாவாகும் . எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பிடிவாதமும் அரசாங்கத்துடன் முரண்படுவதன் காரணத்தினாலேயே விக்கினேஸ்வரன் எம்முடன் இணைந்து செயற்பட முடியாதுள்ளது . இன்று அரசாங்கத்திற்கு இருக்கும் பெரிய சிக்கல் தமிழ்தேசியக் கூட்டமைப்பே ஆகும் . அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்பதே உண்மை . சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் தூண்டி விட்டு தனி தமிழ் ஈழத்தினை உருவாக்கவே சம்பந்தன் நினைக்கின்றார் .
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் யதார்த்தமானவை அல்ல . தனி இராச்சியத்தினை கோரி சுய ஆட்சிக்கான அடித்தளத்தினையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது . இதனை எந்த அரசாங்கம் வந்தாலும் நிறைவேற்ற முடியாதென்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . எந்த இனத்தவரும் யாருக்கும் அடிமைகளில்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதனாலேயே வட மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தினார் .
 
வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறுமென்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும் . எனினும் தெற்கைப் போன்று சுதந்திரமாக செயற்படக்கூடிய மாகாணமாக வடக்கும் இருக்க வேண்டும் . வடக்கு மக்களுக்கென சுதந்திரமாக செயற்படவும் தமது விருப்பங்களை நிறைவேற்றும் உறுப்பினர்கள் வடக்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது .
 
எனவே நிறைவேறாத கொள்கைகளுக்காக கூட்டமைப்பு போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுத்து ஜனநாயக ரீதியிலான ஆட்சியினை நடத்த இணங்க வேண்டும் . அதுவே இன்றைய கால சூழ் நிலையின் தேவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...