Friday, December 27, 2013

இந்திய –இலங்கை மீனவர்கள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் சந்திப்பு!

28th of December 2013
இலங்கை –இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறலாமென மன்னார் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் ஜெஸ்டின் சொய்ஷா தெரிவித்துள்ளார்.
 
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இந்திய –இலங்கை மீனவர்களுக்கிடையிலான குறித்த கலந்துரையாடல் இந்தியாவில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டது.
 
இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்து வருவதுடன், அண்மையில் திருகோணமலை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
இப்பிரச்சினை மிகவும் உக்கிரமடைந்துள்ள நிலையில், இருநாட்டு கடற்படையினரும் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்து வருகின்றனர். அத்துடன், இருநாட்டுக்கும் இடையிலான கடற்பகுதியில், இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் முறுகல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...