Friday, December 13, 2013

கிழக்கு மாகாணத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவை!

14th of December 2013
கிழக்கு மாகாணத்தில் தேசிய ஆள் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவை நேற்று முன்தினம் நேற்று வியாழக்கிழமை.மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுது.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம். உதவிப் பிரதேச செயலாளர் தயாவதி கௌரீஸ்வரன், கபே நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அமுல்படுத்தும் அதிகாரிகளான எச்.எம்.பி. ஹேரத், எம்.ஜே.எம். அமீர் தலைமையிலான அதிகாரிகள், ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், கிராம சேவை அலுவலர்கள் உள்ளிட்டோரும் இன்னும் பல அதிகாரிகளும் இந்த இடம்பெயர் சேவையை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
 
இந்த இடம்பெயர் சேவைக்கு யூ.எஸ்.எய்ட் நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியிருக்கின்றது. மனித உரிமைகள் ஆய்வு நிலையம் மற்றும் கபே நிறுவனம் என்பன ஆளடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவையை நடத்தி வருகின்றன.
இடம்பெயர் படப்பிடிப்பு சேவையும் முத்திரைக் கட்டணங்களும் மேற்படி நிறுவனங்களினால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
 
ஆளடையாள அட்டை இடம்பெயர் சேவையில் பிறப்புப் பதிவு, திருமணப் பதிவு மற்றும் அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான இன்னோரன்ன ஆவணங்களும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 700 பேர் இன்றைய இடம்பெயர் சேவையில் இவலச சேவைகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று கபே நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...