Friday, December 13, 2013

முஸ்லிம் மக்களை உதாரணமாக வைத்து எதிர் காலத்தில் பட்டிருப்பத் தொகுதி மக்கள் செயற்பட வேண்டும்: சாணக்கியன் இராசமாணிக்கம்!

14th of December 2013
இலங்கையிலே தனித் தமிழ் தேர்தல் தொகுதியாகக் காணப்படுவது மட்டக்களப்பிலே அமைந்துள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதிதான் , தற்போத பார்த்தால் முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டு வருகின்றன எனவே முஸ்லிம் மக்களை உதாரணமாக வைத்துக் கொண்டு எதிர் காலத்தில் நமது மக்கள் குறிப்பாக பட்டிருப்பத் தொகுதி மக்கள் செயற்பட வேண்டும்.
என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின்
அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
களுவாஞ்குடி பிரதேசத்தின் மகிளுர் கிராமத்தில் நடைபெற்ற ஒளி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மகிளுர் சிறுவர் சமுக அபிவிருத்தி அமைப்பின் திட்ட முகாமையாளர் அ.சௌந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில் இந்த இடத்தில் கூடியிருக்கும் மாணவர்களைப்போலும் , அவர்களின் கலை நிகழ்வகளைப்போலும் , நான் வேறு எங்கும் காணவில்லை இவ்வாறு திறமையான மாணவர்கள் கொண்ட இந்த பட்டிருப்புத் தொகுதியில் எந்த விதமாக அபிவிருத்திகளும் இதுவரையில் நடைபெறவில்லை என்பதனையிட்டு மிகவும் கவலையாகவுள்ளது.
 
இவைகளெல்லாவற்றினையும் நோக்கிவிட்டுதான் நான் பல இதிட்டங்களை பட்டிருப்பு தொகுதி மக்களின் எதிர்கால நனமை கருதி முன்வைக்கவுள்ளேன். விளையாட்டு, கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, வீடமைப்பு , விவசாயம், போன்ற பல திட்டங்களை இத்தொகுதியில் அமுல்ப் படுத்தவுள்ளேன்.
எனக்கு இப்போதுதான் 23 வயது எனவே இப்பகுதி மாணவர்களின்தும், சிறார்களினதும் , இளைஞர் யுவதிகளினதும், எனைய மக்களினதும், தேவைகள் என்ன என்பதனை எனக்கு யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லை எனவே மக்களுக்கான சேவைகளை எனது பல திட்டங்களுடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளேன்.
 
எதிர் காலத்தில எமது சிறுர்களுக்கு ஆங்கிலம் கற்பித்து அதில் பாண்டிதியம் பெற்றவர்களாக நாங்கள் அவர்களை மாற்ற வேண்டும். இவற்றுக்கு நான் எனது திட்டங்களுடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றேன்.
 
நான் எனது கல்வியினை ஆங்கில மொழியிலேதான் கற்றேன். அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி இலவசமாக ஆங்கிலம் கற்பிக்கவும் திட்டமிட்டுள்ளேன். இதற்கு நான் இராசமாணிக்கம் பவுண்டேஷனூடாக உதவிகளை மேற்கொள்ளவுள்ளேன்.
 
பட்டிருப்புத் தொகுதியில் உள்ள பெண்களின் அபிவிருத்தியினை உயர்த்துவதற்காக விசேடமான திட்டம் ஒன்றினை முன்வைக்கவுள்ளேன். அதற்கா வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெண்களின் சுய தொழில்களுக்கு வட்டியில்லாத கடன் களை வழங்குவதாக சொல்லப் பட்டுள்ளது. அதனை நான் உங்களுக்கு பெற்றுத்தருவேன். இதன்மூலம் பெண்கள் வாழ்வாதார ரீதியில் முன்னேற்றமடைய சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.
 
இலங்கையிலே தனித் தமிழ் தேர்தல் தொகுதியாகக் காணப்படுவது மட்டக்களப்பிலே அமைந்துள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதிதான் , முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டு வருகின்றன எனவே முஸ்லிம் மக்களை உதாரணமாக வைத்துக் கொண்டு எதிர் காலத்தில் நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.
 
என்னுடைய காரியாலயம் பெரியபோரதீவு சந்தியில் அமையப் பெற்றுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து வாரநாட்களில் திறந்திருக்கும் அதில் நேரடியாக வந்து மக்கள் தமது குறை நிறைகளை என்னிடம் எடுத்தியம்பலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...