Tuesday, December 24, 2013

இலங்கை கத்தோலிக்க திருச்சபை தமிழ் இனவாதத்திற்கு குரல் கொடுக்கிறது: குணதாச அமரசேகர!

24th December 2013
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பிரிவினைவாத சக்திகள் நாட்டில்
இருக்கும் வரை நாடு முன்னோக்கிய செல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார் .
 
தமிழ் இனவாதத்திற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை குரல் கொடுத்து வருகிறது . மெல்கம் ரஞ்சித் போன்றவர்களும் இதற்காகவே குரல் கொடுத்து வருகின்றனர் .
 
இந்த விஷக் கிருமிகள் நாட்டில் இருக்கும் வரை ஒரு போதும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது . நாட்டில் 70 வீதத்திற்கும் மேல் சிங்கள பௌத்தர்கள் உள்ளனர் என அவர் சுட்டிகாட்டியுள்ளார் .
 
7 வீதத்திற்கும் குறைவான கத்தோலிக்கர்களை கொண்ட இவர்களுக்கு எப்படி இப்படியான அழுத்தங்களை கொடுக்க முடிந்துள்ளது .
 
இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர் எமக்கு சுதந்திரத்தை வழங்கும் போது , துஷமான நாடாளுமன்ற முறையையும் , பிரித்து வேறுப்படுத்தும் அரசியல் கட்சி முறைமையையும் விட்டுச் சென்றனர் .
 
இதன் காரணமாவே 70 வீதமான பௌத்த சிங்களவர்கள் பிரித்து வேறாக்கப்பட்டுள்ளனர் . இந்த பிரித்து வேறுப்படுத்தும் முறை காரணமாக தமிழ் இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...