Tuesday, December 24, 2013

புதுக்­கு­டி­யி­ருப்பு சிவ­நகர், கோம்­பாவில் பகு­தி­களில் மிதிவெடி அபாயம்!

s243724th December 2013
காணப்படுவதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை காணப்படுகின்றது .
 
இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளான புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கோம்பாவில் , சிவநகர் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் குடியேறியுள்ள காணிகளில் பயிர்ச் செய்கைகளுக்குத் தமது காணிகளைத் துப்புரவு செய்யும் போது மிதி வெடி உள்ளதை அவதானித்துள்ளனர் .
 
சிவநகர் பகுதியில் பயிர்ச்செய்கைக் காணியை துப்புரவு செய்யும்போது அதற்குள் கொத்துக்குண்டு வடிவிலான வெடிகுண்டு ஒன்று காணப்பட்டதையடுத்து குறித்த காணியைத் துப்புரவு செய்த விவசாயி அதை நிறுத்திவிட்டு அதனுள் எந்தப் பயிர்ச் செய்கையினையும் மேற்கொள்ளமுடியாததால் கவலையடைந்துள்ளார் .
 
இதேபோன்று புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியிலுள்ள காணி ஒன்றினைத் துப்புரவு செய்யும்போது வெடிக்கும் நிலையில் அதிசக்தி வாய்ந்த இரு எறிகணைகள் காணப்பட்டதையடுத்து அக்காணியை துப்புரவு செய்த காணி உரிமையாளரும் அதனைக் கைவிட்டுவிட்டார் .
 
இவ்வாறு மீள்குடியேறிய பகுதிகளில் மிக ஆபத்தான நிலையில் மிதி வெடி காணப்படுதனால் இப்பகுதி மக்கள் பெரும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...