Tuesday, December 3, 2013

நெடுந்­தீவு பிர­தேச சபையின் தலைவர் ரொக்­சி­கனின் படு­கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு!

4th of December 2013
நெடுந்­தீவு பிர­தேச சபையின் தலைவர் ரொக்­சி­கனின் படு­கொலை தொடர்பில் வட­மா­காண சபையின் எதிர்க்­கட்சித் தலைவர் கந்­த­சாமி கம­லேந்­திரன் பொலி­ஸா­ரினால் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
 
குறித்த கொலை தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலி­ஸா­ரி­னா­லேயே நேற்று மாலை அவர் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 
கடந்­த­வாரம் கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நெடுந்­தீவு பிர­தேச சபையின் தலைவர் ரொக்­­சிகன் தற்­கொலை செய்­து­கொண்­டி­ருக்­கலாம் என ஆரம்­பத்தில் நம்­பப்­பட்­டது. எனினும் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் மேற்­கொள்­ளப்­பட்ட பிரேதப் பரி­சோ­த­னையின் விளை­வாக அவர் படு­கொலை செய்­யப்­பட்­டமை உறுதி செய்­யப்­பட்­டது.
 
இத­னை­ய­டுத்து விசா­ர­ணைகள் கொழும்­பி­லி­ருந்து சென்ற விசேட குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலிஸ் குழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே நேற்று மாலை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் விசாரணைக்களுக்காக அழைக்கப் பட்டதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...