Tuesday, December 3, 2013

தமிழக அரசியல்வாதிகளின் படகுகளே இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடுகின்றன ராஜித சேனாரட்ன!

4th of December 2013
தமிழக அரசியல்வாதிகளின் படகுகளே அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
 
பெரும்பான்மையான தமிழக மீன்பிடிப் படகுகள் வாரத்திற்கு மூன்று தடவைகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அத்து மீறல்களில் ஈடுபடும் படகுகளின் உரிமையாளர்கள் தமிழக அரசியல்வாதிகளே என தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் இவ்வாறு அத்து மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபட்டால் மட்டுமே படகுகள் வழங்கப்படும் என படகு உரிமையாளர்கள் மீனவர்களுக்கு நிபந்தனை விதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடிப்பதனால் 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடாந்தம் நட்டம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...