Tuesday, December 24, 2013

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வீழ்ச்சி பாதைக்கு இட்டுச்செல்ல எவ­ராலும் முடி­யாது: மாவை சேனா­தி­ராஜா!

s242924th December 2013
இதனைத் தடுக்க யாராலும் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார் .
 
சம்மாந்துறைத் தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடனான சந்திப்பும் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாவிதன்வெளிப் பிரதேச சபைத் தவிசாளர் எஸ் . குணரெத்தினம் தலைமையில் 15 ஆம் கிராமம் பல்தேவைக்கட்டடத்தில் நடைபெற்றது .
 
அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
 
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் . செல்வராசா , பா . அரியநேத்திரன் , மாகாண சபை உறுப்பினர்களான த . கலையரசன் மற்றும் எம் . இராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர் .
 
அவர் தொடர்ந்தும் பேசுகையில் , போர் முடிவுற்றதற்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் , பாராளுமன்றத் தேர்தல் , மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றனர் . இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அரசாங்கம் எங்களிடம் இருந்து ஒரு பியசேனவை எடுத்துவிட்டது .
 
ஆறு தசாப்த காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று வருகிறது . எமது மக்கள் இராணுவத்தின் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்ட போதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே வாக்க ளித்துள்ளமை பெரும் வெற்றியாகும் . அதாவது அன்றிலிருந்து இன்று வரைக்கும் எமது மக்கள் கொள்கையுடனும் இலட்சியத்துடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் வடக்கு - கிழக்கில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் . இதனால் வடக்கில் ஆட்சி அதிகாரத்தினை நாம் பெற்று இருக்கின்றோம் . கிழக்கு மாகாணத்தில் சொற்ப வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தால் அங்கும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் .
 
இந்நிலையில் , ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தோற்கடிக்கவோ அல்லது வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவோ யாராலும் முடியாது . எமது மக்கள் பலமாகவே உள்ளனர் . குறிப்பாக வட மாகாணத் தேர்தலில் அரசாங்கம் தங்களுடைய பலத்தினை முற்றாகப் பிரயோகித்த போதும் என்றும் இல்லாதவாறு பெண்களும் இளைஞர்களும் முன்னின்று செயற்பட்டு கூட்டமைப்பின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர் .
 
கடந்த யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான மக்கள் பலியாகிய பேரழிவுக்குப் பின்னர் பிரதேச சபைகளின் வரவு - செலவு திட்டப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது . இன்று சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தெரிவாகியதற்குப் பின்னர் சபையினை திறன்பட நடத்துவதற்கு மாறாக , மக்களின் நன்மைக்கான வரவு - செலவுத்திட்டங்களை தோற்கடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதை அறியமுடிகின்றது . குறிப்பாக நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக இருந்த ஏ . ஆனந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விதி முறைகளுக்கு அப்பால் செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் அறிக்கை கிடைத்துள்ளது . இன்று உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டால் அதன் தலைவர் 14 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் . இன்று நாட்டிலே அரசாங்கத்தின் ஆளுகையில் இருக்கின்ற 16 பிரதேச சபைகளின் வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கும் அல்லது விதிமுறைகளுக்கு அப்பால் சென்று வரவு - செலவுத்திட்டத்தினை தோற்கடிக்க உதவினாலோ அல்லது அதற்கான சதிகளை மேற்கொண்டாலோ கட்சியில் இருந்து நீக்கப்படுவர் . அவ்வாறு ஒருவர் நீக்கப்பட்டால் அவருடைய பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவே கருதப்படுவர் . இந்நிலையினை அறிந்து ஆனந்தன் செயற்பட வேண்டும் . யாராக இருந்தாலும் கட்சிக்கும் தனக்கும் வாக்களித்த மக்களுக்கும் விசுவாசம் உடையவர்களாக இருக்க வேண்டும் . இதனை விடுத்து கட்சிக்கு எதிரான துரோகங்களைச் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...