Friday, December 13, 2013

தொப்பியோ, பர்தாவோ அனிந்து ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது: ஆர்.எம்.எஸ்.சரத்குமார !

14th of December 2013
ஆட்பதிவு திணைக்களத்தினால் அடுத்தவருடம் புதிதாக வழங்கப்படவுள்ள தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களுடைய கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ பர்தாவோ அனிந்து ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஒசானிக் சுற்றுலாவிடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்டகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
2014 ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரணியல் ஆள் அடையாள அட்டை இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும், கலர் புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அவை அமைந்திருக்கும் எனவும், எந்தவொரு இன கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
 
இலங்கையில் வாழும் இந்திய சீன பிரஜைகளுக்கு 2008ம் ஆண்டு முதல் இலங்கை பிரஜைகள் அந்தஸ்த்து வழங்கப்பட்டு அவர்களுக்கும் ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9வது ஆள் அடையாள அட்டை இடம்பெயர் சேவை மூலம் 6456 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்தில் 69769 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 54603 நபர்பகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் 61477 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று பழைய விண்ணப்பங்களுடன் சேர்த்து 63443 நபர்களுக்கு ஆள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ.
ஹுஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...