Friday, December 13, 2013

வவுனியா வடக்கில் மத்தியஸ்தசபை உருவாக்கம்!

14th of December 2013
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதன் முறையாக மத்தியஸ்தசபை அங்கத்தவர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
20 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 15 அங்கத்தவர்களை உள்ளடக்கி மத்தியஸ்தசபை உருவாக்கப்பட்டுள்ளது.
 
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் உத்தியாகபூர்வமாக மத்தியஸ்தசபையின் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்விற்கு கனகராயன்குளம், புளியங்குளம், நெடுங்கேணி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் வங்கிகளின் முகாமையாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...