Friday, December 20, 2013

கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது: சீ.வி.விக்கினேஸ்வரன்!

20th of December 2013
கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது. எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார்
 
வடக்கு மாகாணசபையினது முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பொன்றினை நடத்திய அவர் அங்கு உரையாற்றுகையிலேயே இக்குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தார்.

எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருகின்றார்கள் என்றால் எமக்கிடையே ஏதோ குறைபாடு இருக்கின்றதென்று அர்த்தம். பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருடன் ஒத்துப்போக முடியாது போனால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம்.
 
அல்லது ஒத்துப்போக முடியாதவர் தமது பதவிகளை ராஜினாமாச்செய்யலாம். அதை விடுத்து எமது கட்சி சார்பில் கொண்டுவரும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை தோற்கடிப்பது மன்னிக்க முடியாத குற்றம். ஏனெனில் அதில் குறைகள்; இருந்தால் ஏற்கனவே அதனை பேசி தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறான நடவடிக்கைகள் எடுத்து தமது வரவு செலவுத்திட்டத்தை; தாமே தோற்கடித்தவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தனதுரையினில் தெரிவித்தார்.
 
அத்துடன் எமது உட்கட்சி பூசல்கள் வெளித்தெரிவதை தவிர்க்க கேட்டுக்கொண்ட அவர் வடக்கு மாகாணசபையில் உள்ளுராட்சி மன்ற விடயம் தன்னுடன் தொடர்பு பட்டதென தெரிவித்த அவர் வடக்கு மாகாணசபை இவ்விவகாரங்களை இனி கண்காணிக்குமெனவும் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு வசமுள்ள வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வலி.கிழக்கு மானிப்பாய் பிரதேச சபைகள் வரவு செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...