Saturday, December 21, 2013

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சித் தாவும் பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள்!

21st of December 2013
எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கட்சி விட்டு கட்சித் தாவி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 5 மாகாண சபை உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கட்சி தாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிட உள்ளனர். அதேவேளை பிரதான கட்சிகளின் தொகுதி அமைப்பாளர்களும் கட்சி தாவ தாயராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் உறவினர்கள் பலர் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இவர்களில் அதிகளவான வேட்பாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளனர். அந்த மாவட்டத்தை சேர்ந்த நான்கு அமைச்சர்களின் சகோதரர்கள், ஒரு அமைச்சரின் மகன் என 5 உறவினர்கள் போட்டியிட உள்ளனர்.
 
அமைச்சர்களின் உறவினர்கள் சிலர் ஏற்கனவே இந்த மாகாண சபையில் அங்கம் வகித்து வருகின்றனர். இவர்களும் இம்முறையும் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...