Thursday, December 19, 2013

வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து சந்திரசிறியை நீக்கக் கூடாது: தேசிய அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை!

19th of December 2013
வடக்கு மாகாண புதிய ஈழ திட்டத்தின் பூர்வ நிபந்தனையாக வடக்கு மாகாண ஆளுநரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையாகும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள ஆவணம் ஒன்றில் அந்த அமைப்பு இதனை குறிப்பிட்டுள்ளது.
 
வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ஜீ.ஏ. சந்திரசிறியை நீக்கி விட்டு சிவில் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என அந்த மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் அழுத்தமாக கோரிக்கை விடுத்து வருகிறார்.
 
முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் இருக்கும் பிரதான தடை ஆளுநர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
 
இதனை தவிர கொழும்பு பேராயர் கதிர்னால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் புலிகளின் ஆதரவாளரான ராயப்பு ஜோசப் ஆண்டகை உள்ளிட்ட ஆயர்கள் பேரவையும் வடக்கு மாகாண ஆளுநரை நீக்குமாறு கோரியுள்ளன.
அதே சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய பாராளுமன்றமும் இந்த கோரிக்கையை முன்வைத்து யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
 
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் உச்சத்தில் இருப்பது ஆளுநரை நீக்க வேண்டும் என்பதாகும்.
ஆளுநரை நீக்குவது என்பது புதிய ஈழ திட்டத்தின் பூர்வ நிபந்தனையாக மாறியுள்ளது. தற்போதைய ஆளுநர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதால் மட்டும் பெருத்தமற்றவராகி விடமாட்டார் என்பது எந்த குடிமகனும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.
 
சட்டவிரோத பயங்கரவாத படையில் சேவையாற்றிய கெரில்லா படையினருக்கு வடக்கு மாகாண சபையின் பதவிகளை வகிக்க முடியும் என்றால், நாட்டின் சட்டரீதியான இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ஏன் ஆளுநராக பதவி வகிக்க முடியாது என தமிழ் மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இதனால் வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து சந்திரசிறி நீக்கப்படக் கூடாது என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...