Thursday, December 19, 2013

தேசியக்கொடியை ஏற்ற மறுத்த வட மாகாண அமைச்சர் மீது நடவடிக்கை எடுங்கள்: ஐ.தே.க. எம்.பி.!

19th of December 2013
இலங்கை தேசியக்கொடியை ஏற்ற மறுத்த வட மாகாண சபை அமைச்சர் தொடர்பில் அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கோரிய ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுஜீவ சேனசிங்க,
 
இந்த நாட்டின் தேசியக் கொடியை அவமதிக்கும் உரிமை எவருக்கும் இல்லையெனவும் கூறினார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
 
இதேவேளை, வட மாகாண அமைச்சர் ஒருவர் தேசியக்கொடி ஏற்ற மறுத்துள்ளார். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அந்த அமைச்சர் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போதுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரை அரசு நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
வட மாகாண முதலமைச்சர் மிகவும் சிறந்தவர். மிகுந்த கல்விமான். விடயங்களை அறிந்தவர். எனவே, இந்த முதலமைச்சரை நன்கு பயன்படுத்தி பல விடயங்களுக்கு தீர்வுகாணமுடியும். இச்சந்தர்ப்பத்தை, இந்த முதலமைச்சரை பயன்படுத்த அரசு தவறி விடக்கூடாது என்றார்.கொழும்பு மாவட்ட எம்.பி. சுஜீவ சேனசிங்க.
 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...