Saturday, December 14, 2013

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை ஆரம்பம்: விமல் வீரவன்ஸ!

14th of December 2013
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையை கடும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
ஜெர்மனியில் அண்மையில் மக்களின் நிரந்தர தீர்ப்பாயம் என்ற தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகப்பெரிய மனித படுகொலை நடந்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கிலேயே இவ்வாறு பிரிவினைவாத மற்றும் புலிப் பயங்கரவாதத்திற்கு ஆதரவான தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...