Monday, December 23, 2013

விலை அதி­க­ரிப்பை குற்­றஞ்­சாட்டும் எதிர்க்­கட்சி வரு­மான அதி­க­ரிப்பு பற்றி பேசவே இல்லை. பிர­தமர் டி.எம். ஜய­ரத்ன!

s232623rd of December 2013
ஆனால் மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது . அது தொடர்பில் எதிர்க்கட்சியினர் பேசுவதில்லை என சபையில் தெரிவித்த பிரதமர் டி . எம் . ஜயரத்ன இலங்கை வரலாற்றில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டங்களில் சிறப்பான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ முன் வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார் .
 
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி திட்டமிடல் அமைச்சின் மீதான வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார் .
 
சபையில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , சில்லறை விடயங்களை முதன்மைப்படுத்தி வரவு - செலவுத்திட்டம் தயாரிக்கப்படவில்லை . எதிர்கால சந்ததியினர் மற்றும் நாட்டின் அபிவிருத்திகளை கருத்தில் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது .
 
பொது நலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்பட்ட பின்னர் எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை கண்டு வியப்படைந்துள்ளனர் .
 
வரவு - செலவு திட்டத்தில் சிறு சிறு விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்காது எதிர்காலத்தில் மக்களின் சுபீட்சத்தை முதன்மைப்படுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது .
 
பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் . ஆனால் , மக்களின் வருமானங்கள் அதிகரித்திருப்பது தொடர்பில் பேசுவதில்லை என்று பிரதமர் தெரிவித்தார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...